ஒவ்வொரு இந்திய குடிமகனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமைகள் மற்றும் கடமைகள்.
குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள IPC என்பது இந்தியன் பீனல் கோட் (Indian Penal Code, 1860) (இந்திய தண்டனைச் சட்டம்) ஆகும். CRPC (The Code of Criminal Procedure, 1973) என்பது குற்றவிசாரனை முறைச் சட்டம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகும்.
இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் கட்டாயம் தெருந்துக் கொள்ள வேண்டி உரிமைகள் மற்றும் கடைமைகள்.
1. ஜனாதிபதியே தவறு செய்தால்கூட 60-நாள்களில் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம் (Article 361(4)).
2. நீதிபதியே தவறு செய்தால் 7 வருடம் சிறை (IPC-217).
3. நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் (Appeal) செய்யலாம் (CRPC 404).
4. அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை (IPC-166).
5. எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6. சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம் (Article 19(1) and CRPC 303,302(2)).
7. வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம் (CRPC 309(2) 312).
8. இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74 and 76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9. இந்திய குடிமகன் எவரையும், எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம் (CRPC-43).
10. ஒரு குற்றம் நடைபெறும் முன்பு, நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு (CRPC 36 & 149).
11. காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே (Article 21(2)).
12. கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50/- லிருந்து 100/- வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் ரூ.50,000/- நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13. தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூ.25/- மட்டுமே. அதற்காக RI Office-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14. காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம் (CRPC.160(2)).
15. அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று (Article 21(14)).
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் (Article 32(8)).
17. பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18. பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு (IPC 193,196 and 200).
19. முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு (IPC 267).
20. அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு (IPC-403).
21. குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு (IPC-315).
22. தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை (IPC-96).
23. பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை (IPC-295).
24. மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை (IPC-295).
25. ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல் 3 ஆண்டு சிறை (IPC-419).
26. ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7-வருடம் சிறை (IPC-468).
27. சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3-ஆண்டு சிறை (IPC-484)
28. கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7-ஆண்டுகள் சிறை (IPC-494).
29. முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை (IPC-495).
30. IPC-499ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம், நீதிபதியையும் கூட உள்ளடங்கும்.
Comments
Thanks you....